×

காலியிடங்களுக்கு இன்று 5ம் கட்ட கவுன்சிலிங்

 

தர்மபுரி, ஜூலை 31: தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் காலி இடங்களுக்கு இன்று (31ம்தேதி) 5ம் கட்ட கவுன்சிலிங் நடக்கிறது. இதுகுறித்து தர்மபுரி அரசு கலைக் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தர்மபுரி அரசு கலைக் கல்லூரியில் 2023-24ம் கல்வி ஆண்டிற்கான 5ம் கட்ட சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே அறிவித்தபடி இன்று (31ம்தேதி) அனைத்து பாட பிரிவிலும் காலியாக உள்ள இடங்களுக்கு சேர்க்கை நடக்கிறது. இக்கல்லூரியில் சேர விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்த மாணவர்கள், இடம் கிடைக்காதவர்கள் இன்று (31ம்தேதி) காலை 11 மணிக்குள் நேரில் வந்து தங்களுக்கான பாடப்பிரிவுகளில் இடம் இருப்பின் சேர்க்கை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

The post காலியிடங்களுக்கு இன்று 5ம் கட்ட கவுன்சிலிங் appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Dharmapuri Government Arts College ,Dinakaran ,
× RELATED வாகன புகை பரிசோதனை மையங்கள் புதிய செயலியை நிறுவ வேண்டும்